×

140 கோடி அமெரிக்க டாலர்கள் மாலத்தீவுக்கு கடனுதவி : மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 140 கோடி அமெரிக்க டாலர்கள் மாலத்தீவு நாட்டுக்கு கடனுதவியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 3 நாள் அரசுமுறை பயணமாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  ஆகியோரை இன்று சந்தித்த அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 2 நாடுகளுக்கும் இடையே 4  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவுநாடான மாலத்தீவில் தொழில்களை தொடங்க அதிகமான வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றார்.

இந்தியா - மாலத்தீவு  இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். எனவே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். பின்னர் பேசிய மாலத்தீவு அதிபர் இந்தியாவுடன் இணைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்வழி, வான்வழி கண்காணிப்பை பலப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளும் தீர்மானித்துள்ளதாக கூறினார். இறுதியாக மாலத்தீவு நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக 140 கோடி அமெரிக்க டாலர்களை நீண்டகால கடனுதவியாக இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Maldives ,announcement ,Central , $ 140 million, Maldives, loan
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...