ஐஎஸ்எல்: மும்பை அபார வெற்றி

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் மும்பை 6-1 என்ற கோல் வெற்றி பெற்றது. இப்போட்டியுடன் ஐஎஸ்எல் தொடரின் ஒருமாத ஓய்வு காலம் தொடங்கியிருக்கிறது.  அடுத்த மாதம் 5ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இத்தொடருக்கு இந்திய அணி தயாராவதற்காக, ஐஎஸ்எல் லீக் போட்டிக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இதுவரை பெங்களூர், கோவா தவிர மற்ற அணிகள் 12 லீக்கில் விளையாடி உள்ளன. எஞ்சிய தொடருக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: