புதுடெல்லி: ஒரு லட்சம் ஏடிஎம்களை மூட திட்டமிடப்படுகிறதா? இல்லை என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரசாத் சுக்லா. ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. ஏடிஎம்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி காலத்துக்கேற்ற தொழில்நுட்ப, பாதுகாப்பு மாற்றங்களை செய்யாமல் ஏடிஎம்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. அதனால் அடுத்தாண்டு மொத்தமுள்ள 2.38 லட்சம் ஏடிஎம்களில் பாதிக்கு மேல் மூட அரசு திட்டம் தீட்டி வருகிறது. மேலும் ஏடிஎம்கள் பராமரிப்பு, பாதுகாப்பு செலவுகள் அதிகமாக உள்ளதால் அரசுக்கு நிதி வருவாய் குறைகிறது என்பதும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டமைப்பு அறிக்கையில் கூறியிருந்தது.
அரசு வங்கிகளின் ஏடிஎம்களில் தான் மக்கள் பலரும் பணம் எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில், ஏடிஎம்களை மூடும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான்.