சென்னை: சென்னை அருகே வங்கக்கடலில் 800 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆந்திராவின் ஓங்கோல்-கர்நாடகா இடையே புயல் கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.