தரமணி: தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவியர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தரமணி எம்ஜிஆர் சாலை, தந்தை பெரியார் நகரில் கடந்த அக்டோபர் மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த கடை ரயில் நிலையம் அருகிலும், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்லைக்கழகம் அருகிலும் அமைந்துள்ளது. மேலும் எதிரே சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியும் உள்ளது. இதையொட்டி தந்தை பெரியார் நகர் குடியிருப்பு பகுதியும் உள்ளது. இங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களும், மாணவ மாணவியரும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் ரயில் நிலையம் அருகில் போதை ஆசாமிகள் திரிவதால் பெண் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.