சென்னை: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம், திருமுருகன் நகர், முதல் தெருவில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாயை நகராட்சி ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்வது இல்லை. இதனால், கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள், முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்தனர். இதன் எதிரொலியாக, கடந்த மாதம் 10ம் தேதி நகராட்சி ஊழியர்கள் கால்வாயின் ஒரு பகுதியை சுத்தம் செய்தனர். பின்னர், மேற்கண்ட கால்வாயை அவ்வப்போது சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, நகராட்சி நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவில் தெரிவித்துள்ளது.