வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய தம்பி கழுத்தை அறுத்து கொலை: அண்ணன் கைது

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை கார்னேஷன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி கணேஷ் (21), சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாலை வெங்கடேசன் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது கணேஷ் வீட்டிலேயே படுத்து கொண்டு டிவி பார்த்தாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர், வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியானது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தம்பி கணேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கணேஷ் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து ஆர்கே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனா். கணேஷ் வேலைக்கு செல்லாததால் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வெங்கடேசனிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: