கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை கார்னேஷன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி கணேஷ் (21), சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாலை வெங்கடேசன் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது கணேஷ் வீட்டிலேயே படுத்து கொண்டு டிவி பார்த்தாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர், வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியானது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தம்பி கணேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.