கீழ்ப்பாக்கம்: வடபழனி நூறடி சாலையில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவமனை நிர்வாகம், கோட்டூர்புரம் ரயில் நிலையம் எதிரில் ஆகாஷ் பன்நோக்கு மருத்துவமனை என்ற பெயரில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. வசந்த் அன்கோ உரிமையாளர் எச்.வசந்தகுமார் தலைமை வகித்து, மருத்துவமனையை திறந்து வைத்தார். பெண்களின் பாலியல் பிரச்னைக்கு தீர்வு காணும் அதிநவீன கருவியான பெமிலிப்ட் என்ற புதிய லேசர் கருவியை நடிகர் பாண்டியராஜன் இயக்கி வைத்தார். விழாவில் காவல்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை துணை இயக்குநர் ராதிகா, சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை பேராசிரியர் சுமதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.