பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் கைது

சென்னை: அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் ஜெரினா (30). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போன் எண்ணில் 2 பேர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்தனர். இதுபற்றி ஜெரினா  அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில், அசோக் நகர் 2வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (26), அசோக் நகர் 88வது தெருவை சேர்ந்த எஸ்ஆர்எம் கல்லூரியில் படிக்கும் 3ம் ஆண்டு கல்லூரி மாணவன் ஆகாஷ் (19) என்பதும் தெரியவந்தது. அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

* ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில்  ஆந்திர வாலிபர் நாகேஷ் (30), என்பவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப  முயன்ற ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பாபு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் 1வது  தெருவை சேர்ந்த குமார் (48)  என்பவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

* செங்குன்றம் தீர்த்தங்கரையாம்பட்டு  திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பிரபாகரன்  (44) அங்குள்ள நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது லாரி  மோதி இறந்தார்.

* பெரம்பூர் பகுதியில் தனியாக நடந்து   செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புழல் பகுதியை சேர்ந்த பாஷா  (19),  எருக்கஞ்சேரியை சேர்ந்த தீபக் (21), ஜெயசக்தி (21) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர்.

* திருநின்றவூர் அம்பேத்கர் நகரை  சேர்ந்த சென்னை  உயர் நீதிமன்ற வக்கீல் பாலசுப்பிரமணி (48) என்பவரை சரமாரியாக தாக்கிய  வளசரவாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரை நேற்று போலீசார்  கைது செய்தனர்.  தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

* கிண்டி வேளச்சேரி மெயின்  ரோட்டில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தியாகராஜன் (33)  என்பவரின் பைக்கை திருடிய,  அதே  குடியிருப்பில் உள்ள சலூன் கடையில்  வேலை  பார்க்கும் மோகன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* கோடம்பாக்கம்  சோமால் மேனன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 2வது தளத்தில்  வெங்கடராமானுஜம் என்பவரின் மாமியார் வீட்டில் 200  அமெரிக்கா டாலர், ₹7 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: