விமானத்தில் சில்மிஷம் தமிழருக்கு 9 ஆண்டு சிறை

வாஷிங்டன்: தமிழகத்தை சேர்ந்தவர் பிரபு ராமமூர்த்தி (35). கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்த இவர் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் லாஸ்வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு விமானத்தில் அவர் பயணம் செய்தார். நள்ளிரவில் விமானம் வானில் ெசன்றபோது அருகே அமர்ந்திருந்த சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ெடட்ராய்ட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நேற்று முன்தினம் அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து, பிரபுவுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தண்டனை காலம் முடிந்ததும் அவரை நாடு நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: