×

உளவு அமைப்புகளின் தலைவர்களுக்கு பணி நீட்டிப்பு

புதுடெல்லி: ஐபி எனப்படும் மத்திய உளவுத்துறையின் தலைவராக ராஜிவ் ஜெயின் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், உளவுத்துறை அமைப்பான ‘ரா’வின் தலைவராக இருப்பவர் அனில் கே.தஷ்மானா. இவரது 2 ஆண்டு பணிக்காலம் வரும் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இரு அதிகாரிகளுக்கம் மேலும் 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால் இரு உயர்அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : intelligence organizations , Intelligence system, leaders, work extension
× RELATED வெறுப்புப் பேச்சு: பிரதமர் மோடிக்கு...