டெல்லி: ரஃபேல் உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல்-ஐ சேர்க்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அனில் அம்பானியின் நிறுவனத்தை போர் தயாரிப்பில் கூட்டு சேர்த்தது ஏன்? எனவும் கேள்வி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். செய்தியாளர் முன் அம்பலப்பட்டு விடுவோமோ என்று பிரதமருக்கு அச்சம் என்றும் ரபேல் விமானத்தின் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரான்சில் என்ன நடந்தது என்பது பிரதமருக்கு மட்டுமே தெரியும் என்றும் நாட்டின் காவலன் என்று கூறிய பிரதமர் மோடி திருடனாகிவிட்டார் என ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.