செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமி பலாத்காரம்: 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை தொழுவர் நந்தவன தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் வெள்ளி கொலுசுக்கு சலங்கை மாட்டும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமி ஒருவர் சரவணனின் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவரின் ஏழ்மையை பயன்படுத்தி சரவணன், கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனை சிறுமிக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதனை அந்த சிறுமியிடம் காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனின் செல்போனை பார்த்த மனைவி லட்சுமி, அதில் இருந்த காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் லட்சுமி தெரிவித்து, செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் காண்பித்துள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் சரவணனை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அவர்களை மிரட்டிய சரவணன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சரவணன், செவ்வாய்பேட்டையில் உள்ள சுடுகாட்டு கோயிலுக்கு சிறுமியை அழைத்துச் சென்று, அவரது பெற்றோருக்கு தெரியாமல் கட்டாய தாலி கட்டி உள்ளார். இது பிடிக்காமல் அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். தகவல் அறிந்து டவுன் மகளிர் காவல் நிலைய போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்ட போலீசார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: