சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை தொழுவர் நந்தவன தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் வெள்ளி கொலுசுக்கு சலங்கை மாட்டும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமி ஒருவர் சரவணனின் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவரின் ஏழ்மையை பயன்படுத்தி சரவணன், கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனை சிறுமிக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதனை அந்த சிறுமியிடம் காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனின் செல்போனை பார்த்த மனைவி லட்சுமி, அதில் இருந்த காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.