வீடுகட்ட அனுமதிக்கு 40 ஆயிரம் லஞ்சம் பிடிஓ சிக்கினார்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் அப்பகுதியில் வீடு கட்ட அனுமதி சான்று கோரி ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம  ஊராட்சி) பச்சம்மாளை அணுகினார். அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சண்முகம் ரூ.40 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். புகாரின்படி லஞ்ச ஒழிப்புபோலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை சண்முகம் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சம்மாளிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பிடிஓ பச்சம்மாள், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: