வீட்டுமனை தகராறில் பெண் அடித்துக் கொலை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமம்,  பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமாவாசை.  இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கோதண்டன் (26),  கோபால் (18) ஆகிய மகன்களும், லோகநாயகி (15) என்ற மகளும் உள்ளனர். கோதண்டன் அதே பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து  வருகிறார். 2வது மகன் கோபால்  சிறுங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல்  படித்து வருகிறார். மகள் லோகநாயகி மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில்  10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை  சுமார் 4.30 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை பிடித்து வர  கிருஷ்ணவேணி வயல் பகுதிக்கு சென்றார். இரவு 7 மணி ஆகியும் அவர் திரும்பி  வராததால் அவரது கணவர் அமாவாசை, மகன்கள் கோதண்டன், கோபால் ஆகியோர் வயல் பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில்  ஒரு பெண் சடலம் புதர் ஒன்றின் அருகே இருந்தது. பதற்றத்துடன் அதை தோண்டி  பார்த்தபோது அது கிருஷ்ணவேணி என தெரிந்து.தகவலறிந்து வந்த மானாம்பதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணவேணியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது கணவர் அமாவாசை  கொடுத்த புகாரின் பேரில், மானாம்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்தனர். விசாரணையில், இவர்களுக்கும்  பக்கத்து வீட்டில்  வசிக்கும் ஏழுமலை என்பவரது குடும்பத்திற்கு வீட்டுமனை தகராறு இருப்பது  தெரிய வந்தது. இதுகுறித்து பலமுறை இரு குடும்பத்தினரும் சண்டை  போட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஏழுமலையின் மகன் ஸ்ரீதர் மற்றும் அவனது நண்பர்  கிரியோன் ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து மானாம்பதி போலீசார் ஏழுமலை மகன் தர் (19), சீனிவாசன்  மகன் கிரியோன் (19) ஆகியோரையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததரின்  தந்தை ஏழுமலை (48) என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்  இந்த கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி  மற்றும் கருங்கல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: