பஸ்சில் மோதல்; 7 மாணவர்கள் கைது

வியாசர்பாடி: பெரியபாளையத்தில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி மாநகர பஸ் (த.எ 592) நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. வியாசர்பாடி சர்மா நகர் மார்க்கெட் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, அங்கிருந்த சில மாணவர்களுக்கும், பஸ்சில் இருந்த மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, அடிதடியானது.  போலீசார் வழக்கு பதிந்து, அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த சதீஷ், விக்னேஷ், தினேஷ், அப்துல் அயூப், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த விக்னேஷ், பிரகாஷ், ஜெயராம் ஆகியோரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: