மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது

சென்னை: சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர், தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது, சைதாப்பேட்டை டோபிகானா, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சூர்யா (21), பரத் (25), முத்துபாண்டி (19) ஆகியோர் மாணவர்களை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுபற்றி சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்களது பெற்றோர், சம்பவம் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: