×

ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை....... பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பாரத் கலான் - குண்ட் மொஹல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள்  திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

மேலும், அப்பகுதியில் மொபைல் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. கடும் துப்பாக்கி சண்டையின் முடிவில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 230 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . அதே சமயம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 225 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldiers ,Srinagar , The terrorists, the gunmen, the security forces, Jammu and Kashmir,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து