பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு: பிரதமர் தெரசா மே வெற்றி

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் வெளியேறுவதற்கு 52% பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே ஐரோப்பிய யூனியனுடன் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்த செயல்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தினார்.

இதனால் அவருக்கு எதிராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 48 எம்.பிக்கள் நமிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நெற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 117 வாக்குகளை பெற்று பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தெரசா மே, எதிர்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022 ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: