ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை காரில் கடத்த முயன்றவர் கைது

திருச்செந்தூர்: ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை காரில் கடத்த முயன்றவர் கைது திருச்செந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டு  கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செந்தூர் -  தூத்துக்குடி சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தி போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்த போது வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரை ஓட்டிவந்த வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற பாலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து திருச்செந்தூர் பகுதியில் விசேஷ நாள்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அவரது வீட்டில் மண்ணில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2,000 மதுபாட்டில்கள்,  33 புல் மதுபாட்டில்கள் என மொத்தமுள்ள 2,457 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் மதிப்பு ரூ.2.5 லட்சம்  என போலீஸார் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: