சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த மகனின் சிகிச்சை செலவை அளிக்க தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மறுத்ததை அடுத்து மகனுடன் பெற்றோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலாஜி நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏ.சி மெக்கானிக் வெல்டிங் பிரிவில் 5 ஆண்டுகளாக விக்னேஷ் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். ஓராண்டு முன் விக்னேஷ் பணியின் போது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதுகு தண்டு மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயல் இழந்துள்ளது. அதனால் அவர் தற்போது படுத்த படுக்கையாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவரை காப்பாற்ற சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.