சென்னை: ராஜஸ்தானில் உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் படத்துக்கு போலீசார் மரியாதை செலுத்தினர். ஓராண்டு நினைவு தினத்தையொட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் மக்கள் மரியாதை செலுத்தினர். 2017 ல் கொள்ளையர்களுடனான மோதலில் சக ஆய்வாளர் சுட்டதில் எதிர்பாராத விதமாக பெரியபாண்டியன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.