சென்னை: இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசை விழா பிப்ரவரி 2,3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: 1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500க்கும் மேற்ப்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5 முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பவர் இளையராஜா. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும்விதமாக இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை நடத்த உள்ளோம்.