இளையராஜாவை கவுரவிக்கும் இசை விழா: சென்னையில் பிப். 2,3ல் நடக்கிறது

சென்னை: இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசை விழா பிப்ரவரி 2,3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: 1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500க்கும் மேற்ப்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5 முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பவர் இளையராஜா. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும்விதமாக இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை நடத்த உள்ளோம்.

 அடுத்த ஆண்டு பிப்ரவரி 2, 3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா நடைபெறும். மேற்படி விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள். எனவே பிப்ரவரி 2, 3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: