சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பயிற்சி முடித்து, 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கான புதிய பணியிடங்களை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வழங்கி வெளியிட்டுள்ள உத்தரவு: அதில் கிருஷ்ணராஜ், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உதவி எஸ்பியாகவும், அல்லாட்ட பள்ளி பவன்குமார் ரெட்டி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உதவி எஸ்பியாகவும், ஹரிகிரன் பிரசாத், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உதவி எஸ்பியாகவும், டோங்க்ரே பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உதவி எஸ்பியாகவும், சிவபிரசாத், விருதுநகர் உதவி எஸ்பியாகவும், ஜவகர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.