சென்னை: சென்னையில் பல இடங்களில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் கடை வைத்து வியாபாரியான நபர், துப்பாக்கியுடன் போலீசிடம் சிக்கினார். பாரிமுனை முத்துசாமி சாலையில் உள்ள செவிலியர் குடியிருப்பு அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய நபரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.