சென்னையில் துப்பாக்கியுடன் இரவில் போலீசிடம் சிக்கிய வெளிமாநில வியாபாரி: கொள்ளையடித்து வியாபாரியானதாக வாக்கு மூலம்

சென்னை: சென்னையில் பல இடங்களில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் கடை வைத்து வியாபாரியான நபர், துப்பாக்கியுடன் போலீசிடம் சிக்கினார். பாரிமுனை முத்துசாமி சாலையில் உள்ள செவிலியர் குடியிருப்பு அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய நபரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரசிங் எனத் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். அவர், சவுகார்பேட்டையில் பைகள் விற்பனை கடை நடத்தி வருவதும், பல இடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்த பணத்தில் தான் கடையை வைத்து வியாபாரியானதாகவும் நரேந்திரசிங் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: