சென்னை: ஜெ.ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதா கட்சி என்றோ ஜெ.ஜெ கட்சி என்றோ பதிவு செய்ய முடியாது என்ற விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு எதிர்த்து தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஜோசப் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.