சென்னை: புதுவையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இருதயம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு வந்துள்ளது. புதுவையில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் இருதயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் இருதயத்தை கொண்டுவர போக்குவரத்தை சரி செய்து போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் மலர் மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவர்கள் இதயத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.