அரக்கோணத்தில் பழங்குடியினர் வசிக்கும் 8 வீடுகளில் திடீரென தீ விபத்து

அரக்கோணம்: அரக்கோணத்தில் பழங்குடியினர் வசிக்கும் 8 வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அரக்கோணம் அடுத்த காவனுர் ஏரி பகுதியில் பழங்குடியின மக்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காலை வேளையில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இங்கு இருக்கூடிய அனைத்து குடும்பத்தினரும் இன்று காலை பணிக்கு சென்ற நிலையில் ஒரு வீட்டில் பற்றிய தீ விபத்தானது தொடர்ந்து அடுத்தடுத்து பரவலாக தீ பரவியதால் 8க்கும் மேற்பட்ட வீடுகளில் தீயானது பரவியது.

அருகில் எவரும் இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பிறகு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் தியானது பெரிய அளவில் இருந்ததால் மற்றோரு வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் 20க்கம் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வீடுகளில் மக்கள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: