கலிபோர்னியா: அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க் பகுதியில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று திடீரென அங்குள்ள ஒரு கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அருகில் இருந்த கட்டடங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். சோதனையின் பின்னர் வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பேஸ்புக் நிறுவன தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி