திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கிராம செவிலியர் லஞ்சம் கேட்பதாக கூறி கர்ப்பிணிகள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகப்பேறு உதவித்தொகை பெற கிராம செவிலியர் தங்கரத்தினம் என்பவர் ரூ.1000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனால் கிராம செவிலியரை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.