பால் கலப்பட வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: பால் கலப்பட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பால்கலப்படம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை மறுத்த தனியார் பால் நிறுவனங்கள், அரசு நிறுவனமான ஆவின் பாலிலும் கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஒருசில தனியார் நிறுவனங்களின் பால், தரமற்று இருந்ததாகவும், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியிருந்தார். மேலும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுக்கு ஐகோர்ட் சரமாரியாக கேள்வியெழுப்பியது. அவை,

* கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

* பால் கலப்படம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* பால் கலப்படத்தை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

* பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

* பால் கலப்பட வழக்குகளின் நிலை என்ன?

* வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது?

* பால் கலப்பட வழக்கில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆஜராகாதது ஏன்?

மேலும் பால் கலப்படம் தொடர்பாக தமிழக அரசின் பதில் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கலப்பட பால் விவகாரத்தில் புலன் விசாரணையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலப்பட பால் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து ஜன.21க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: