சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவவதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டிச.15, 16 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும், தாழ்வு நிலையானது 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.