சென்னை: கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பட்டதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் பால் உரிமைக்கு எத்தனை பேர் உரிமம் பெற்றுள்ளனர்? என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு கேள்வியெழுப்பியுள்ளனர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.