வாட்ஸ் அப் பழக்கத்தால் வந்த வினை பள்ளி மாணவி பலாத்காரம்: 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பனையும், போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மதுமிதா. இவர்களது மகள் சுமதி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். (அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 7ம் தேதி வீட்டில் இருநத் சுமதி திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.  இதுகுறித்து காசிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனா்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் சுமதி தனியாக நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த மாதவரம் போலீசார், மாணவியிடம் விசாரித்து, காசிமேடு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், சுமதியிடம் விசாரித்தனர். அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன் காசிமேடு பகுதியை சேர்ந்த மோகன் (20) என்ற வாலிபருடன், சுமதிக்கு வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மோகன், ஆசை வார்த்தை கூறி கடந்த 7ம் தேதி சுமதியை ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவுக்கு கடத்தி சென்றார். அங்குள்ள விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்தார்.பின்னர், சுமதியை பஸ்சில் சென்னைக்கு அனுப்பிய மோகன், தனது நண்பருடன் பைக்கில் வருவதாக கூறியுள்ளார்.

அதன்படி மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் மோகனுக்காக சுமதி காத்திருந்தபோது மீட்கப்பட்டார் என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

இதைத்தொடர்ந்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து, மோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகனின் நண்பர் விஜய் (20) என்பவரையும் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: