விஏஓக்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: விஏஓக்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.  

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடங்கியிருக்கின்றன. நவம்பர் 28ம் தேதியில் இருந்தே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பணிகளை படிப்படியாக குறைத்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, இப்போதும் அடுத்தடுத்து 3 கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளனர். இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்றி, கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: