ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்?போலீசார் விசாரணை

சென்னை:  சென்னை திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (50), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக வேளச்சேரி செல்வதாக தனது மனைவி ஜெயசுதாவிடம் கூறிவிட்டு காரில் புறப்பட்டுள்ளார். அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஜெயசுதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் சிவகுமாருக்கு ₹1 கோடிக்கு மேல் கடன் இருப்பதால், கடன் கொடுத்தவர்கள் யாராவது கடத்தினார்களா அல்லது தொழில் போட்டியில் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: