காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் 4 போலீசார் சுட்டுக்கொலை

ஸ்ரீ நகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ளது செயின்போரா பகுதி. இங்கு நேற்று 4 போலீசார் காவல் நிலையில் இருந்தபடி கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த போலீசார் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து தீவிரவாதிகள் அங்கிருந்த போலீசாரின் 3 தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து காயமடைந்த போலீஸ்காரர் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார். இந்த தாக்குதலில் ஈடுபட்டது  பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 போலீசார் இறந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: