5,000 லஞ்சம் சர்வேயர் கைது

ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (54). விவசாயி. இவரது மனைவி சுமதி (48). தங்களுக்கு வீட்டுமனையை மகன் சுப்ரமணியத்திற்கு தானமாக கொடுத்துள்ளனர். அந்த இடத்தை அளவீடு செய்து தர ஆத்தூர் தாலுகா சர்வேயர் (பொ)   தனபாலை (35) அணுகியுள்ளனர். அவர் ₹5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்த ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை ஆத்தூர் நகராட்சி சர்வேயர் தனபாலிடம் சுமதி வழங்கினார்.  உடனடியாக தனபாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: