ஐதராபாத்: தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாஜ கடுமையான பிரசாரம் செய்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பறந்து, பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், இருகட்சிகளுக்கும் இங்கு பலத்த அடி விழுந்துள்ளது. பாஜ இங்கு ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோஷாமகால் தொகுதியில் பாஜ.வின் ராஜா சிங் லோதா, தனக்கு அடுத்தபடியாக வந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர் பிரேம் சிங் ரத்தோரை விட 17,734 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.