சென்னை: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகளை தொய்வின்றி செயல்படுத்திடவும், தொழில் முனைவோருக்கு வழங்கும் சேவையினை மேம்படுத்திடவும், இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 12 உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.