வெற்றியிலும் ஒன்று சேராத காங்கிரசார் சத்தியமூர்த்திபவனை எட்டி பார்க்காத கோஷ்டி தலைவர்கள்

சென்னை: 5 மாநில தேர்தல் வெற்றியை கூட கொண்டாட சத்தியமூர்த்தி பவனை கோஷ்டி தலைவர்கள் எட்டி கூட பார்க்காமல் புறக்கணித்தனர். தமிழக காங்கிரசில் நாளுக்கு நாள் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. திருநாவுக்கரசரை மாற்ற கோரி அவருக்கு எதிரான கோஷ்டி தலைவர்கள் டெல்லி மேலிடத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், 5 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜவை பின்னுக்கு தள்ளியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக விளங்கிய இந்த தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்தது. இந்த  வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இந்த வெற்றியை சத்தியமூர்த்திபவனில் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடினர். அதில் முன்னாள் எம்பி  விஸ்வநாதன் தவிர வேறு எந்த தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. தொண்டர்கள் பட்டாசு வெடித்து பட்டையை கிளப்பினர். ஆனால் மூத்த தலைவர்கள் யாரும் சத்தியமூர்த்திபவனுக்கு வராதது தொண்டர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எந்த கோஷ்டி பூசலாக இருந்தாலும் ராகுல்காந்தியின் முயற்சியால் காங்கிரஸ் வெற்றியை தொடங்கியுள்ள நிலையில் அதை கூட கொண்டாட விருப்பமில்லாமல் மூத்த தலைவர்கள்  புறக்கணித்திருப்பது கட்சியையே அவர்கள் புறக்கணித்துள்ளதற்கு சமமானது என்பது தொண்டர்களின் புலம்பலாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: