சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், நீர் அடித்து நீர் விலகாது. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. அது போலதான் நானும், திருமாவளவனும். அனைத்து சமூக மக்களுக்கான இளம் தலைவர் திருமாவளவன். திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி வலுவாக உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறும். 20 தொகுதிக்கான தேர்தல் நடந்தால் திமுக அணிதான் வெல்லும். இதில், வென்றாலே திமுக பொதுத்தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சியை பிடிக்கும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.