புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அரசியல் லாபத்துக்காக கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்களை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்படவேண்டும். இந்த கூட்டத்தொடரை பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான கூட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் லாபத்துக்காக நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் தொடர்புடைய விவகாரங்களை அவையில் முக்கியத்துவம் தந்து எம்பிக்கள் விவாதிக்க வேண்டும்.