×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது: அனைத்துக்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அரசியல் லாபத்துக்காக கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்களை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்படவேண்டும். இந்த கூட்டத்தொடரை பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான கூட்டமாக  மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் லாபத்துக்காக நீங்கள் பயன்படுத்தக்கூடாது.  எனவே இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் தொடர்புடைய விவகாரங்களை அவையில் முக்கியத்துவம் தந்து எம்பிக்கள் விவாதிக்க  வேண்டும்.

விவாதங்கள் அனைத்தும் பொதுமக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அனைத்து உறுப்பினர்களும் இந்த தொடரில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.  அப்போதுதான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு காணமுடியும். நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : winter session ,parliament ,Modi , Winter, winter, Modi , political , PM Modi
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...