கொல்கத்தா: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு 136 பயணிகளுடன் நேற்று இண்டிகோ ஏர் நிறுவனத்தின் ஏர்பஸ் (ஏ320) விமானம் புறப்பட்டது. கொல்கத்தாவுக்கு 46 கிமீ தொலைவில் இருக்கும்போது நடுவானில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும் புகை வருவது தெரியவந்தது. இதையடுத்து விமானி, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவலை தெரிவித்தார். இதையடுத்து, அனைத்து விமானங்களின் தரையிறக்கம் மற்றும் புறப்பாடு நிறுத்தப்பட்டு, இண்டிகோ விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.