வியாசர்பாடி: முன்னறிவிப்பு இல்லாமல் குடியிருப்புவாசிகளை வலுக்கட்டாயமாக வீடுகளை காலி செய்யும்படி தமிழக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர், அன்னை சத்யா நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளை அகற்றிவிட்டு, லப்ட் வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சென்னை கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு, தங்களை வலுக்கட்டாயமாக வீடுகளை காலி செய்யும் பணியில் தமிழக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபடுவதாக புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: