துணிக்கடையில் திருடிய பெண் கைது

சென்னை: புழல் அடுத்த விநாயகபுரம் புத்தாகரம் சூரப்பட்டு சாலையில் உள்ள துணிக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில் வந்த 3 பெண்கள், துணி எடுப்பது போல் நடித்து சுமார் 2 ஆயிரம் மதிப்புள்ள புடவை, சுடிதார் துணிகளை அபேஸ் செய்துகொண்டு தப்ப முயன்றனர்.  கடை ஊழியர்கள் அவர்களில் ஒரு பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் 2 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

* திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்ற கேப்ரியல் (52), இவரது மனைவி சாகிதா (42), இவர்களது  மகன் ஆல்பர்ட் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த அம்பத்தூர் அடுத்த பட்டறைவாக்கம், பஜனை  கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (43), மண்ணூர்பேட்டை  காமராஜர் நகரை சேர்ந்த தர் (23), கொரட்டூர் போத்தியம்மன் கோயில்  தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (32) ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: