சென்னை: புழல் அடுத்த விநாயகபுரம் புத்தாகரம் சூரப்பட்டு சாலையில் உள்ள துணிக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில் வந்த 3 பெண்கள், துணி எடுப்பது போல் நடித்து சுமார் 2 ஆயிரம் மதிப்புள்ள புடவை, சுடிதார் துணிகளை அபேஸ் செய்துகொண்டு தப்ப முயன்றனர். கடை ஊழியர்கள் அவர்களில் ஒரு பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் 2 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
* திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்ற கேப்ரியல் (52), இவரது மனைவி சாகிதா (42), இவர்களது மகன் ஆல்பர்ட் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.