சென்னை: “ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசின் 20,000 நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்” என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு 20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த புனிதப்பயணம் பெத்தலஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடங்கியது.
இப்புனித பயணம் டிசம்பர் 2018, ஜனவரி 2019 முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணம் காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இந்த விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்படிவங்களை பதவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கல்சா மகால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு வருகிற 14ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். நேரில் வர வேண்டியது இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி