தீவிபத்தில் குடிசைகள் சாம்பல்

ஆலந்தூர்: உள்ளகரம் புழுதிவாக்கம் பகுதி மேடவாக்கம் பிரதான சாலையை  அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் உள்ளகரம் போலீஸ் பூத் அருகே உள்ள காலி இடத்தில் 4 குடிசைகள் அமைத்து தரப்பட்டது. இதில், பணியாளர்களின் உடைமைகள், சாலைப் பணிக்கான தளவாட பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை இந்த குடிசைகளில் தீவிபத்து ஏற்பட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசைகள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: