சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி சற்று வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது என்றார். இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த சூழலால் தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலையால் தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை இருக்காது என்றார்.